Close
ஆகஸ்ட் 1, 2026 10:21 மணி

மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தென்காசியில் அமைச்சர் வி.கே.ராஜீவ்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சரும், தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான வி.கே.ராஜீவ், பல்வேறு துறைகளின் சார்பில் 241 பயனாளிகளுக்கு ரூ.237.69 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், தென்காசி மாவட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட ஆய்வுகளும், ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மக்கள் நலனுக்காகத் தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு முதலமைச்சரும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். ஆகையால் மக்களாகிய நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்; உங்களது கோரிக்கைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொடுக்கப்படும்.

முதற்கட்டமாக அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அரசு உயர் அலுவலர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top