நாளை மறுநாள் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, சென்னையில் இருந்து நாமக்கல் வழியாக நாளை மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் 17ம் தேதி வியாழக்கிழமை நடக்கிறது. இதையொட்டி முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து, நாமக்கல் வழியாக மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் (வண்டி எண் 06153) நாளை புதன்கிழமை மாலை 4.10 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் நாமக்கல்லுக்கு நாளை இரவு 10.47க்கு வந்தடைகிறது. இங்கிருந்து புறப்பட்டு நாளை மறுநாள் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மதுரை சென்றடையும்.
அதே போல மதுரையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு (வண்டி எண் 06154) நாளை வியாழக்கிழமை மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 7 மணிக்கு நாமக்கல்லை வந்தடையும். இங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு 18-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு சென்றடையும்.




