Close
ஆகஸ்ட் 1, 2026 10:24 மணி

சிறுபான்மை மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை: அமைச்சர் ஷாஜகான் கொடுத்த அப்டேட்!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜகான், தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்தார்.

நிகழ்ச்சிகளுக்கு இடையே அரசு சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், சிறுபான்மையினர் நலன் மற்றும் நகர்ப்புற நிர்வாக மாற்றங்கள் குறித்துப் பல முக்கிய அறிவிப்புகளைப் பகிர்ந்துகொண்டார்.

சிறுபான்மையின மாணவர்களைக் கல்வியில் ஊக்கப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை, வரவிருக்கும் நிதியாண்டில் உயர்த்தி வழங்க வேண்டும் எனத் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசு சார்பில் சிறுபான்மை சமூகத்தினருக்காக அமல்படுத்தப்பட்டு தற்போது முடக்கப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி, மத்திய அமைச்சரைச் நேரில் சந்தித்துப் பேச உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நகர்ப்புற நிர்வாக அமைப்புகள் குறித்துப் பேசிய அவர், உள்ளாட்சி வார்டுகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழக முதல்வரிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

கடந்த காலங்களில் வீடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்பட்ட நிலையை மாற்றி, தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வார்டுகளை மறுவரையறை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top