புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 80ஆவது சுதந்திர தினவிழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி, இயக்குனர் ரா. சுதர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் வழக்கறிஞர் நவீன்குமார் செயலாளர் வி.தினேஷ், பொருளாளர் விஎன்எஸ். செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர், பள்ளியின் முன்னாள் மாணவரும் பேலஸ் ரோட்டரி சங்கத்தின் தலைவருமான வழக்கறிஞர் நவீன்குமார் தேசியக்கொடி ஏற்றிவைத்தார். செயலாளர் தினேஷ் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பொருளாளர் விஎன்எஸ் .செந்தில் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
நிகழ்வில் மாணவர்களின் தேசபக்திப் பாடல்கள் மற்றும் சுதந்திர தின சிறப்பு நடனம் நடைபெற்றது. மேலும் ஆகஸ்டு பதினைந்து அன்று பிறந்த மூன்றாம் வகுப்பு மாணவி சமித்தாவுக்கு பிறந்த நாள் பரிசு வழங்கப்பட்டது.
பள்ளியில் எல்.கே.ஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பதினான்கு ஆண்டுகள் படித்துவரும் மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. பள்ளியின் முன்னாள் மாணவியும் பெங்களுரில் பணியாற்றிவரும் தனியார் நிறுவன உயர் அதிகாரியுமான லட்சயா அவரது மகள் ஆதிராவுடன் கலந்து கொண்டு எண்பதாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தான் படித்த பள்ளி நூலகத்துக்கு எண்பது நூல்களை வழங்கிச் சிறப்பித்தார். தாரா மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் தனசேகரன் சுதந்திரதின வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் பேலஸ் ரோட்டரி சங்கத்தலைவர் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர் வழங்கறிஞர் நவீன்குமார் சிறப்புரை வழங்கினார். அவர் பேசும்போது, நான் படித்த பள்ளிக்கே சிறப்புவிருந்தனராக வருகை தந்து தேசியக்கொடி ஏற்றி வைத்திருக்கிறேன். சகோதரி மு. லட்சயா தான் படித்த பள்ளி நூலகத்துக்கு நூல்கள் வழங்கியிருக்கிறார் என்றால் எங்களை நல்லமுறையில் வளர்த்து ஆளாக்கிய அத்தனை பெருமையும் புகழும் பள்ளியின் தாளாளர் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களே சாரும்.
இன்னும் எத்தனையோ மாணவர்கள் வெளிநாடுகளில் நல்ல பதவிகளில் பணியாற்றி இந்தப் பள்ளிக்கு பெருமை சேர்க்கின்றனர். மாணவர்களாகிய நீங்களும் தாய் தந்தை சொல்லைக் கேட்டு, ஆசிரியர்களின் அறிவுரைகளை ஏற்று வாழ்வில் முன்னுக்கு வரவேண்டும்.
மாணவர்கள் நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல, நிகழ்காலத்தையும் தீர்மானிக்கிற சக்திகளாக உருவாக வேண்டும். அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டார்.
நிகழ்வில் கவிஞர் முத்துநிலவன், ரோட்டரி பொறுப்பாளர்கள் துரைமணி, சுரேஷ்குமார், வி.எஸ் வீரன், வழக்கறிஞர் செந்தில்குமார், பேராசியர் கருப்பையா, மகாத்மா ரவிச்சந்தின், யோகா பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, அபிராமசுந்தரி, பிரபாகரன், கலைவாணி, ரம்யா மற்றும் மேலாளர் ராஜா, ஆசிரியர்கள் கமல்ராஜ், உதயகுமார், ராமன், சரசு ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
முன்னதாக பள்ளியின் இயக்குனர் ரா. சுதர்சன் வரவேற்க, துணை முதல்வர் குமாரவேல் நன்றி கூறினார். நிகழ்வை ஆசிரியர்கள் காருண்யா, ஷைனி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.




