தென்காசி மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கத்தின் சார்பில் நாடு தழுவிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 11 மணியளவில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் மணிமாறன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தங்கமாரியப்பன் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் காந்திமதிநாதன் எழுச்சி உரையாற்றினார்.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நடராஜன், எல்.ஐ.சி பிரிவை சேர்ந்த கேசவராம் சிங், போக்குவரத்து சங்கத்தை சேர்ந்த சங்கரகிருஷ்ணன், சிவில் சப்ளைஸ் பிரிவை சேர்ந்த சந்தனகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில தலைவர் வாசு நன்றியுரை கூறினார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட பார்வையாளர் சதீஷ் முன்னிலையில், மாவட்ட செயலாளர் பா.தங்கமாரியப்பன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.




