நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.85 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை காவல்துறையினர் அழித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஜூன் வரை நாமக்கல், திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு காவல்துறையினரால் பல்வேறு பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த வகையில் நாமக்கல் மதுவிலக்கு பிரிவின் மூலம் 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றின் மூலம் 1,017 மதுபாட்டில்களும், திருச்செங்கோட்டில் 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 884 மதுபாட்டில் என மொத்தம் 1,901 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் மொத்தம் ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்து 150 மதிப்புடையதாகும். இந்த மதுபாட்டில்களை நாமக்கல் மதுவிலக்கு காவல்துறையினர் நல்லிபாளையம் நுகர்பொருள் வாணிப கிடங்கு அருகில் கீழே கொட்டி அழித்தனர்.




