Close
ஆகஸ்ட் 24, 2026 9:14 மணி

நாமக்கல் கவிஞர் நினைவு நாளில்..,

தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா.,கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது., தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு., கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்..,
—- இந்த மேற்கோள்கள் எல்லாம் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை சொன்னவைதான்.

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி, இலக்கியம் மற்றும் அரசியல் மேடைகளில் இன்றளவும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

நாமக்கல் மற்றும் கோயம்புத்தூரில் பள்ளிக் கல்வி பயின்றார். 1909 ஆம் ஆண்டில் திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் இளங்கலை (பி.ஏ) பயின்றார். தொடக்கக் காலத்தில் நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றி, பின்னர் தொடக்கப் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

தேச பக்திப் பாடல்களைப் பாடி தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர். முதலில், திலகரின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர். மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப்போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.

இவரது கவிதைகள் விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும், அகிம்சை பற்றியும் இருந்ததால் ‘காந்தியக் கவிஞர்’ என அழைக்கப்படுகிறார். கவிஞரின் நாட்டுப்பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்து சிறப்பித்தது.

தமிழ்நாட்டின் முதல் அரசவை கவிஞர் பதவியும், பத்மபூஷன் பட்டமும் பெற்றவர் சாகித்ய அகாடமியில் தமிழ் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர். தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த நாமக்கல்லிலுள்ள இல்லத்தை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கியுள்ளது. இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டியுள்ளது.

இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top