Close
ஆகஸ்ட் 26, 2026 8:07 மணி

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இவச பயிற்சி வகுப்பு 28ம் தேதி துவக்கம்

டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாமக்கல்லில் 28 ம் தேதி துவங்குகிறது. இது குறித்து, கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் 821 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 2, குரூப் 2ஏ, தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் செப். 9 ஆகும்.

இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி, நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் 28ம் தேதி காலை 10.30 மணிக்கு துவங்கப்பட உள்ளது.

வேலை வாய்ப்பு மையத்தின், தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற மாணவர்கள், 2025&-2026 ஆம் ஆண்டு வெளியான தேர்வு முடிவுகளில் மட்டும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 17 பேரும், குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வில் 15 பேரும், சீருடைப்பணியாளர் போலீஸ் தேர்வில் 19 பேரும், பிஜி டிஆர்பி தேர்வில் 2 பேரும், கூட்டுறவுத்துரை தேர்வில் 23 பேரும், ஹெல்த் இன்ஸ்பெக்டர் தேர்வில் 12 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286 -222260 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ, onlineclassnkl@gmail.com  என்ற இமெயில் மூலமாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரில் தொடர்பு கொண்டோ தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தினை பதிவு செய்து பயன்பெறலாம்.

பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top