Close
ஆகஸ்ட் 26, 2026 7:57 மணி

மத்திய அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மூலம் பெண்களுக்கு தொழிற்பயிற்சி

மத்திய அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில், ப.வேலூரில் பெண்களுக்கான இலவச தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நடைபெறுகிறது.

மத்திய அரசின் தேசிய வள அமைப்பான, அகமதாபாத் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், நாமக்கல் மாவட்டதில் தொழில்முனைவோராக விருப்பமுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 50 வயதுக்கு உட்பட்ட 50 பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தையல் பயிற்சி , துணி மற்றும் சணல் பொருட்களில் இருந்து லேப்டாப் பேக், பேபி பெட், ஷாப்பிங் பேக், மனி பர்ஸ், ஃபைல் உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்து ஒரு மாதம் இலவச பயிற்சி, நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் கந்தசாமி கண்டர் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்தப் பயிற்சியில் பல்வேறு தொழில் வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய மாநில அரசுகளின் பல்வேறு மானிய திட்டங்கள் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் 88258 12528 என்ற எண்ணிற்கு, தங்களின் பெயர், முகவரி விவரங்களை எஸ்எம்எஸ் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்தவர்களுக்கு, வருகிற 31ம் தேதி திங்கள்கிழமை, பயனாளிகள் தேர்வு நேர்முக தேர்வு நடைபெறும். அதில் பங்கேற்று பயனடையலாம் என, இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட அலுவலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top