Close
செப்டம்பர் 7, 2026 7:38 மணி

சிப்காட் திட்டம் ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சி தலைவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோப்புப்படம்

சிப்காட் திட்டத்தை ரத்து செய்வதற்கு, சட்டசபையில் எதிர்ப்பு தெரிவித்த, எதிர்கட்சி தலைவர் உதயநிதியை கண்டித்து, நாமக்கல்லில் சிப்காட் எதிர்ப்புக்குழுவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர் பகுதிகளில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க, கடந்த தி.மு.க., அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாய முன்னேற்ற கழகம், சிப்காட் எதிர்ப்பு இயக்கம் மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பினர் கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தமிழக அரசு சிப்காட் திட்டத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. சட்டசபையில், எதிர்கட்சி தலைவர் உதயநிதி, நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை எவ்வாறு ரத்து செய்யலாம் என, தெரிவித்தாக கூறப்படுகிறது.

இதைக்கண்டித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, சிப்காட் எதிர்ப்பு குழு சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார்.

சிப்காட் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டசபை எதிர்கட்சி தலைவர் உதயநிதியை கண்டித்து கோஷம் எழுப்பினர். விவசாயிகளின் கோரிக்கைகளை புறக்கணித்து சிப்காட் திட்டத்தை செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து மேலும் கடுமையான போராட்டங்களில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top