Close
செப்டம்பர் 10, 2026 3:27 மணி

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்த ஆட்சியர்

விளையாட்டு வீராங்கனைகளுடன் விளையாடிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பை 2026க்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் வந்தனாகார்க் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் முன்னிலை வகித்தார்.

தமிழ் நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பங்கேற்கும் வகையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில்  முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள இணையத்தில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 461 நபர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, சிலம்பம், கையுந்துபந்து, இறகுப்பந்து, கைப்பந்து, பால்பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட 45 வகையான விளையாட்டு போட்டிகள் 5 பிரிவுகளாக பல்வேறு தேதிகளில் நடைபெறவுள்ளது.

மாவட்டம் மற்றும் மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ . 3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூபாய் ஆயிரமும் வழங்கப்படும். மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும். இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும். மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும். மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து பேசுகையில், தமிழ்நாட்டிலேயே திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் அதிக அளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர். மேலும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வந்துள்ள அனைத்து மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர்,வீராங்கனைகளுக்கு போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளில் வென்று சாதனை புரியுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டு போட்டிகளில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் மாவட்ட ஆட்சியர்பங்கேற்று விளையாடினாா்.

தொடர்ந்து திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் தங்க மோதிரம் வைக்கும் பாதுகாப்பு பெட்டகங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளின் விவரங்கள் குறித்தும், இத்திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் மற்றும் பாதுகாக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் மண்டல முதுநிலை மேலாளர் (பொ) சாந்தி, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிவனு பாண்டியன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுலவர் சண்முகப்பிரியா, அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனை முதல்வர் மரு. எட்வினா வசந்தா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top