Close
செப்டம்பர் 11, 2026 6:34 மணி

நாமக்கல்லில் வரும் 23-ம் தேதி தேசிய தேசிய தொழில் பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம்

நாமக்கல்லில் வரும் 23-ம் தேதி தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது.

தேசிய தொழில் பழகுநர் ஊக்குவிப்புத் திட்டம் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் நாமக்கல் மாவட்ட அளவில் பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நாமக்கல் கீரம்பூர் அரசு ஐடிஐ மையத்தில் வரும் 23-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஐடிஐ படித்து, பயிற்சி நிறைவு செய்து இதுவரை தொழில் பழகுநர் பயிற்சியை மேற்கொள்ளாத பயிற்சியாளர்கள் தங்களது கல்விச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை, தேசிய, மாநில தொழிற்சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் தொழில் பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்து கொள்ளலாம்.
மேலும், 8,10,12-ம் வகுப்பு, பட்டபடிப்பு முடித்தவர்களும் இந்த முகாமில் கலந்து கொண்டு, தொழில் பழகுநராகசேர்ந்து பயன்பெறலாம். தொழில் பழகுநர் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் காலியாக உள்ள தொழில் பழகுநர் இடங்களை, இந்த முகாமில் நேரடியாக பங்கேற்று தொழில் பழகுநர்களைதேர்வு செய்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனரை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top