Close
செப்டம்பர் 12, 2026 4:17 மணி

தமிழக முதல்வரைக் கண்டித்து நாமக்கல்லில் மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

சட்டசபையில் முன்னாள் முதல்வர் குறித்து தவறாக பேசிய, தமிழக முதல்வரைக் கண்டித்து, நாமக்கல்லில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக சட்டசபையில், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் குறித்து தவறாக பேசிய, தமிழக முதல்வர் விஜய்யை கண்டித்து, நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார்.

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் குறித்தும், மிசாவில் அவர் கைது செய்யப்பட்டது குறித்தும், தமிழக சட்டசபையில் தவறான கருத்தை தெரிவித்த முதல்வர் விஜய்யை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில திமுக நிர்வாகிகள் மாயவன், ராணி, நக்கீரன், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, நகர திமுக செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவகுமார், முன்னாள் எம்எல்ஏக்கள் ராமசுவாமி, ராமலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் உட்பட திரளான திமுகவினர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top