Close
செப்டம்பர் 20, 2024 5:25 காலை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறை நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணை அளிக்க அறிவுறுத்தல்

டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட தகவல்:

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் காலத்திற்கேற்ப தேவையான மாற்றங் களை அறிமுகம் அவற்றை நடைமுறைப் படுத்தி வருகிறது. மேலும் தெரிவு முறைக ளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத் தன்மையை அதிகரிக்கும் பொருட்டும், போட்டித் தேர்வுகளை விரைவாக நிறைவு செய்யும் வகையிலும், அவ்வப்போது சீர்திருத் தங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணைய தளத்தில் ஒருமுறை நிரந்தரப்பதிவு (One Time Registration ÔTR) கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை 28.02.2022 ஆம் தேதிக் குள் தவறாமல் இணைத்து எதிர்கால த்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறி விக்கைகளின் அடிப்படையில் தனது ஒரு முறை நிரந்தரப்பதிவு (OTR) கணக்கு மூல மாக விண்ணப்பங்களை  சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் இது குறித்து விளக்கம் ஏதேனும் தேவைப்படுமானால், 18004190958 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி அல்லது (helpdesk@tnpscexams.in /grievance.tnpsc@tn.gov.in) என்ற மின்னஞ்சல் மூலமாக அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top