Close
செப்டம்பர் 20, 2024 6:38 காலை

புதுகை நகராட்சி 21 வது வார்டு அதிமுக வேட்பாளருக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம்

புதுக்கோட்டை

புதுகை நகராட்சி 21 வது அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை நகராட்சியின்  21 -ஆவது வார்டில்  அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்  மலர்விழிமுத்து  வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டு களில்அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் சுயேட்சைகள் என மொத்தம் 282 பேர்   போட்டி யிடுகின்றனர். இதில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை நகராட்சியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில்  21 -ஆவது வார்டில்    மலர்விழிமுத்து போட்டியிடுகிறார். இவர் ஏற்கெனவே 2006-11 மற்றும் 2011-16  ஆகிய ஆண்டுகளில்  நகர்மன்ற உறுப்பினராக பதவி வகித்து வார்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். இந்த வார்டில்  ஆண், பெண் உள்பட மொத்தம் 3,140 வாக்காளர்கள் உள்ளனர்.

தற்போது மூன்றாவது முறையாக அதிமுக சார்பில் களம் காணும் மலர்விழிமுத்து -வுக்கு ஆதரவாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்எல்ஏ-வுமான  டாக்டர் சி. விஜயபாஸ்கர் சனிக்கிழமை  21-வது வார்டுக்குள் பட்ட  ஈஸ்வரன்கோவில் தெரு, வஉசி நகர், மாயாண்டிசாமி நகர் சின்ன ரயில் வேகேட், பொன்னையா ஊருணி, வேளார் தெரு, காட்டுமாரியம்மன்கோவில், கம்பர் தெரு, முஸ்லிம் தெரு, செட்டி தெரு  ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச்சென்று  இரட்டை இலைச்சின்னத் திற்கு வாக்குகள் சேகரித்தார்.

இதில் அதிமுக நிர்வாகிகள் உடன் சென்று பிரசாரம் செய்தனர். புதுக்கோட்டை நகராட்சிக் கான தேர்தல் பிப் 19 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top