Close
செப்டம்பர் 20, 2024 6:55 காலை

நம்பியூர் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வாக்கு சேகரிப்பு

நம்பியூர் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர்களுக்கு  முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நம்பியூர் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர் களுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஈரோடு மாவட்டம், கோபி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட நம்பியூர் பேரூராட்சியில் 14 வார்டுகளில் அதிமுக சார்பில் நிர்வாகிகள் போட்டியிடுகின் றனர். இந்த பேரூராட்சி 7 -வது வார்டுக்கு அதிமுக., நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியன் மற்றும் பிரபு, ஆண்டிக்காடு சரவணன் உள்பட 14 வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்எல்ஏ வாக்கு சேகரித்தார். அப்போது, அதிமுக ஆட்சியில் நம்பியூர் பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்ட  திட்டப்பணிகள்  குறித்த துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது அதிமுக  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top