Close
செப்டம்பர் 20, 2024 8:47 காலை

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்: கோவில் பூசாரிகள் நலச் சங்கம் திமுகவுக்கு பிரசாரம்

சென்னையில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவை சந்தித்து தேரதலில் பிரசாரம் செய்த கோயில் பூசாரிகள் நலச்சங்க மாநிலத்தலைவர் பி. வாசு மற்றும் நிர்வாகிகள்

கோவில் பூசாரிகள் நலச் சங்கம் ஏற்கெனவே அறிவித்தபடி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்  ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  (16/02/2022) சென்னையில்  கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் பி.வாசு, மாநில பொருளாளர் கே..சுந்தரம் பூசாரியின் குரல் மாத இதழ் ஆசிரியர் புருசோத்தமன் , மத்திய சென்னை பொறுப்பாளர் என்.ஜி. பிரபு , கோபால்சாமி மற்றும் பூசாரிகள் சென்னை முழுவதும் உள்ள திருக்கோயில்களுக்கு சென்று பூசாரிகளை சந்தித்து நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டி துண்டு பிரசுரங்களை  விநியோகித்து வாக்கு சேகரித்தனர்..

சென்னையில் உள்ள பிராட்வே பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  பி.கே. சேகர்பாபு நேரில்  சந்தித்து ஆதரவு தெரிவித்ததோடு அவரோடு  இணைந்து பிரசார பயணத்தில் பங்கேற்றனர்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top