Close
செப்டம்பர் 20, 2024 5:35 காலை

ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி அளிப்பதற்காக நிதி ஒதுக்கீடு: புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் வரவேற்பு

தொல்லியல்

தொல்லியல் ஆய்வுக்கு ஆசிரியர்களுக்குப் பயிற்சி

ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி அளிப்பதற்காக  தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ததற்கு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

தமிழர் நாகரீகம் பண்பாடு, கலாசாரம் தொன்மையின் சிறப்பு , தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் தொல்லியல் தலங்களின் சிறப்புகள் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கத்தோடு தொல்லியல் துறை வாயிலாக ஆயிரம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ. 3 கோடி  மதிப்பீட்டில் பயிற்சி அளிப்பதற்கான முன்மொழிவினை பள்ளிக்கல்வித் துறையின் மானிய கோரிக்கையின் போது அறிவித்துள்ளதை பெருமகிழ்வுடன்  வரவேற்கிறோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி   இதற்காக உரிய பரிந்துரைகளை செய்த தொல்லியல் துறை மற்றும் தொழில் துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு  ஆகியோருக்கு   நன்றியும் பாராட்டுகளையும் கூறுவதாக  புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ. மணிகண்டன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top