Close
செப்டம்பர் 20, 2024 3:47 காலை

கோடை வெப்பம்: 1 முதல் 5ம் வகுப்பு வரை சனிக்கிழமை விடுமுறை: தமிழக அரசு பரிசீலனை

தமிழ்நாடு

கோடைவெப்பம் அதிகரிப்பால் 1 முதல் 5 வரை வகுப்புகளுக்கு சனிக்கிழமை விடுமுறை

கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால்  1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை சனிக்கிழமை விடுமுறைக்கு தமிழக அரசு பரிசீலனை

கோடை வெப்பம் காரணமாக சனிக்கிழமைகளில் 1 முதல் 5 -ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.

கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக கடந்த மார்ச் 2020 முதல் மூடப்பட்ட பள்ளிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு படிப்படியாக திறக்கப்பட்டு தற்போது முழுவீச்சில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த சனிக்கிழமை களிலும் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோடைக்கால வெப்பத்தின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றன. பல மாவட்டங்களில் வெப்பத்தின் அளவும் 100 ஐ தாண்டி பதிவாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து, பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி சனிக்கிழமை களில் விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top