Close
செப்டம்பர் 20, 2024 3:45 காலை

புதுக்கோட்டையில் மதிமுக 29 வது ஆண்டு தொடக்க விழா

மதிமுக

புதுக்கோட்டையில் நடைபெற்ர மதிமுக கட்சி தொடக்க விழாவில் பங்கேற்ற நிர்வாகிகள்

புதுக்கோட்டையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் 29 வது ஆண்டு  தொடக்க நாள் விழா கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் 29 வது ஆண்டு  தொடக்க நாளை   முன்னிட்டு மதிமுக சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை நகரத்தில் சாந்தநாதபுரம் 3 -ம் வீதி,  நிஜாம் காலனி நுழைவு, பேரான்குளம் பேருந்து நிறுத்தம், அசோக் நகர் பேருந்து நிறுத்தம், காமராஜபுரம்  3 -ம் வீதி, வடக்கு 3 -ம் வீதி, மச்சுவாடி, வ.உ.சி.நகர் பாலம்,  திருவப்பூர் பேருந்து நிறுத்தம், கே.கே.சி கல்லூரி  எதிர்ப்புறம் உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் மதிமுக கொடி ஏற்றப்பட்டது.

நகரச் செயலாளர் அரசி.ரெ.கருணாநிதி  தலைமையில் மாவட்ட பொருளாளர் மாத்தூர் எஸ். கே கலியமூர்த்தி கட்சி கொடி ஏற்றி வைத்தார். தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் கா.சி.சிற்றரசு, வழக்கறிஞர் இராஜா.ஆதிமூலம், பொறியாளர் இரா.பாண்டியன் மாவட்ட இளைஞர் அணி செயலாளர், மதி.பிரபு மாவட்ட மாணவர் அணி செயலாளர், மற்றும்  வட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் 100 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top