Close
செப்டம்பர் 20, 2024 6:29 காலை

முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா காணொளி மூலம் கண்டுகளித்த மக்கள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் டிஜிட்டல் திரை மூலம் ஒளிபரப்பான முன்னாள் முதல்வர் கருணாநிதியில் உருவச்சிலை திறப்பு விழா நிகழ்வை கண்டு களித்த பொதுமக்கள்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா காணொளி மூலம் புதுக்கோட்டையில்  கண்டுகளித்த பொதுமக்கள்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் (28.05.2022)  சனிக்கிழமை செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் சென்னை, ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர்  முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் மு.கருணாநிதி முழு திருவுருவ சிலையை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் இந்திய குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

அந்நிகழ்ச்சியினை பொது மக்களின் பார்வைக்காக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடமாடும் டிஜிட்டல் திரை மூலம்  நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top