Close
மே 20, 2024 3:15 மணி

புதுக்கோட்டை இசையாசிரியருக்கு பாராட்டு…

புதுக்கோட்டை

புதுக்கோட்டை இசை ஆசிரியை .பா.சௌம்யா விற்கு பாராட்டு

புதுக்கோட்டை இசை ஆசிரியை பா.சௌம்யாவிற்கு கல்வி யாளர்கள், இசை வல்லுனர்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

புதுக்கோட்டையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் இசை ஆசிரியையாக இருக்கும் .பா.சௌம்யா, எண்ணற்ற ஏழை மாணவ, மாணவியர்களுக்கு கட்டணமின்றி இலவசமாக இசை பயிற்சி அளித்ததுள்ளார்.

பல மாணவ, மாணவியர்களை மாவட்ட மற்றும் மாநில அளவில் இசையில் பல வெற்றிகளை பெறவும் செய்துள்ளார். சிறந்த இசை ஆசிரியையாக தனது கடமையை தொடர்ந்து செய்து வருகிறார்.

வெள்ளித் திரையிலும் தமது மாணவர்களை புது பாடகர் களாக களம் இறக்கியுள்ளார் என்பதற்காகவும்,  இசைத் துறையில் பா.சௌம்யா விற்கு கௌரவ டாக்டர் பட்டத்தை ஓசூர்  ரிசர்ச் பல்கலைக்கழகம்  (Research University ) வழங்கி பாராட்டி கௌரவித்தது .

கௌரவ டாக்டர் பட்டம்  பெற்ற   பா.சௌம்யாவை  கல்வி யாளர்கள், இசை வல்லுனர்கள் சமூக ஆர்வலர்கள்  வாழ்த்தி னார்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top