Close
செப்டம்பர் 20, 2024 3:59 காலை

பொன்னமராவதி பேரூராட்சியில் தூய்மைப்பணிக்கான மக்கள் இயக்க செயல்பாடு முகாம்

பொன்னமராவதி

பொன்னமராவதியில் நடைபெற்ற தூய்மைப்பணிக்கான மக்கள் இயக்க செயல்பாடு விழிப்புணர்வு முகாம்

பொன்னமராவதி பேரூராட்சியில் தூய்மைப்பணிக்கான மக்கள் இயக்க செயல்பாடு குறித்த இல்லம் தேடி விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது..

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூராட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஆணைக்கிணங்க வீடுதேடி நகர தூய்மைப்பணிக்கான மக்கள் இயக்க செயல்பாடு குறித்த விழிப்புணர்வு  பிரசாரம் நடத்தப்பட்டது.

பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் அறிவுறுத்தலின்படி, செயல் அலுவலர் மு.செ.கணேசன் ஆலோசனையின்படி பொன்னமராவதி பேரூராட்சி நகர பகுதி, பூக்குடி வீதியில் வீடுதேடி தூய்மைப்பணிக்கான மக்கள் இயக்க செயல்பாடு, குப்பைகளை எவ்வாறு தரம் பிரித்து வழங்குவது, டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட விழிப்புணர் வை பொது மக்களுக்கு டெங்கு களப்பணியாளர்கள் வழங்கினர்.

இதில் சமூக ஆர்வலர்கள், டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கத்தினர் என பலர் கலந்து கொண்டு வீடுதேடி டெங்கு ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வை அப்பகுதி மக்களிடையே விளக்கி கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top