Close
செப்டம்பர் 20, 2024 5:52 காலை

உலக சுற்றுச்சூழல் தினம்(ஜூன் 5) இன்று..

உலக சுற்றுச்சூழல் நாள்

உலக சுற்றுச்சூழல் நாள்

ஜூன் – 5 –  உலக சுற்றுச்சூழல் தினம்: பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

உலகெங்கும் வெப்பம் அதிகரித்து வரலாம், ஆனால் அதன் தாக்கத்தை எல்லோரும் ஒரே மாதிரியாக உணர்வதில்லை. இதேபோலதான் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளும் உள்ளன என்று ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

எந்த ஆண்டு முதல் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது? இன்று உலக சுற்றுச்சூழல் தினம். 1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 5 -ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது.

உலக சுற்றுச் சூழல் தினம்: 2022 ஆண்டுக்கான கருப்பொருள் என்ன?உலக சுற்றுச்சூழல் தினம் 2022 ஸ்வீடனில் நடத்தப்படுகிறது. “ஒரே ஒரு பூமி” என்பது பிரசார முழக்கம், “இயற்கையுடன் இணக்கமாக வாழ்வது” என்ற கருத்தை மையமாகக் கொண்டது.

பல்லுயிர்ப் பெருக்கம் என்றால் என்ன? அது ஏன் முக்கியமானது? பல்லுயிர்ப் பெருக்கம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருந்த கருத்து, “பல்லுயிர்ப் பெருக்கம் என்பது அவசரமானது மட்டுமின்றி நமது இருத்தலியலுக்கான நெருக்கடியும் கூட.
சமீப காலமாக, பிரேசில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை புரட்டிப்போட்ட காட்டுத் தீ, ஆப்பிரிக்காவை அச்சுறுத்திய வெட்டுக்கிளி தாக்குதல் மற்றும் தற்போது உலகையே உலுக்கி வரும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் என நாம் பல்வேறு அபாயங்களை சந்தித்து வருகிறோம்.
இவையனைத்தும் மனிதர்கள் மற்றும் வாழ்வின் வலைகள் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதை நிரூபிக்கிறது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிலையில், சுற்றுச்சூழல் மற்றும் அதுசார்ந்த தலைப்புகளில் பிபிசி தமிழ் இதுவரை பதிப்பித்த சில முக்கிய  குறிப்புகளின் தொகுப்பை பார்க்கலாம்.

சுற்றுச்சூழல் பாதிப்புக்கு யார் காரணம்? பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான முயற்சியில் ”நெருக்கடியான தருணம் வந்துவிட்டது” என்று சர் டேவிட் அட்டன்பரோ எச்சரிக்கை விடுத்திருந்தார்.
”ஒவ்வொரு வருடமும் நாம் பிரச்சனைகளை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறோம்,” என்று பிரபல இயற்கை ஆர்வலரும், தொலைக்காட்சிதொகுப்பாளருமானஅட்டன்பரோ கூறியுள் ளார். எதிர்காலத்தில் மிக அபாயகரமான அளவுக்கு வெப்பநிலை உயர்வதைத் தவிர்ப்பதற்கு என்ன மாதிரியான, சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது பற்றி 2018-இல் ஐ.நா. பருவநிலை மாற்ற அறிவியல் குழு பட்டியலிட்டது.

’எல்லா நாடுகளும் பருவநிலை அவசரநிலை அறிவிக்க வேண்டும்’ உலகில் உள்ள எல்லா நாடுகளும் பருவநிலை அவசர நிலையை அறிவிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறைகூவல் விடுத்திருந்தார் ஐ.நா. தலைமைச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் 5 -ஆம் ஆண்டு தினத்தை ஒட்டி நடந்த ஒரு முக்கியமான உலகத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பேசும்போது அன்டோனியா குட்டரெஸ் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

உலக சுற்றுச்சூழல் நாள்
மரம் நடும் தங்க கண்ணன்

மரம் நடுவது எப்படி ?
மரம் நடுவது நன்மை தரும்; பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைக் காக்க உதவும் என மரங்கள் பல பலனை தரும். ஆனால் இடத்திற்கு தகுந்தாற்போல ஒரு மரத்தை நடவில்லை என்றால் அதுவே தவறாக முடிந்துவிடும் என்கின்றனர் லண்டனில் உள்ள க்யூ தாவரவியல் பூங்காவை சேர்ந்த நிபுணர்கள்.
அதேபோல மரம் நடுவதற்கு முன் நாம் இருக்கும் காடுகளை அழிக்காமல் காப்பதும் முக்கியமான ஒன்று. பூமியில் வாழ்வதற்கு காடுகள் மிக அவசியம். உலகில் உள்ள நான்கில் மூன்று பங்கு மரங்கள், உயிரினங்களுக்குக் காடுகள்தான் இருப்பிடம். கரியமில வாயுவை உள்வாங்கி, உணவு, எரிபொருள் மற்றும் மருந்து எல்லாம் அளித்து வருவது காடுகள்தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top