Close
செப்டம்பர் 20, 2024 6:50 காலை

புதுக்கோட்டை அனுமன் திருச்சபை சார்பில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா      

புதுக்கோட்டை

புதுகை அனுமன் திருச்சபை சார்பில் மாணவிக்கு பரிசளித்த நிர்வாகிகள்

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபை சார்பில்  மாணவ மாணவிகளுக்கு  கல்வி விருது வழங்கும் விழா  நடைபெற்றது                                                      .
புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி மார்கெட் சந்திப்பிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த  ஆஞ்சநேயர் திருக்கோயிலில்    அனுமன் திருச்சபை சார்பில் 10 -ஆம் வகுப்பு, பிளஸ் -1, பிளஸ் -2 மாணவ மாணவிகளுக்கான கல்வி விருது வழங்கும்விழா நடைபெற்றது.
அரசு பொது தேர்வு ஏழுதிய   10 -ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கான கல்வி வழிபாடு ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் கல்வி சங்கல்ப  பூஜையில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் தேர்வில் சிறப்பாக மதிப்பெண் பெறுகின்றவர்களுக்கு அனுமன் திருச்சபையினர் விருதுகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கல்வி விருது  வழங்கப்பட்டு வருகிறது .
அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும்  நடைபெற்ற விருது வழங்கும் விழாவுக்கு   கல்வியாளர் பேராசிரியர்  மாலதி வகித்தார். கே.மணி குருக்கள் அனைவரையும் வரவேற்றார். நகர்மன்ற உறுப்பினர் கார்த்திக் மெஸ் மூர்த்தி, ஆனந்தன் ஆகியோ் முன்னிலை வகித்தனர்.
 திருக்கோகர்ணம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் லதா கந்தசாமி  10 -ஆம் வகுப்பு, பிளஸ் -1 பிளஸ்- 2  தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்  பெற்றவர்களுக்கும் ,மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கும்  கல்வி விருது வழங்கி வாழ்த்தி பேசினார்.
நிகழ்வில் திருக்கோகர்ணம் பெற்றோர்ஆசிரியர் கழக தலைவர் சினிவாசன்,   ஜெ ஜெ கல்லூரி பேராசிரியர் அனிதா, மன்னர் கல்லூரி பேராசிரியர் நாகேஸ்வரன், பழனியப்பன், முருகேசன், லெட்சுமணன்  ,   மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள்  கலந்து கொண்டனர்.   விழா    ஏற்பாடுகளை, அனுமன் திருச்சபை நிர்வாகிகள்   செய்தனர். .ஆன்மிகநெறியாளர் ஆனந்தன் நன்றி கூறினார் ,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top