Close
ஆகஸ்ட் 1, 2026 1:34 மணி

சீலக்காரி அம்மன் ஸ்ரீ கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே தெத்தூர் கிராமத்தில் அருள்மிகு சீலக்காரி அம்மன், கருப்புசாமி மற்றும் 21 பந்தி 61 சேனை சகல பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது.

இரண்டுகால யாக பூஜைகளுடன் கும்பாபிஷேக நடந்தது. முதல் கால பூஜை ஆக விக்னேஸ்வர பூஜை புண்ணியக வாசனம், வாஸ்து ஸ்ந்தி , பரிவார பூஜையும் நடந்தது, அன்று மாலை அன்னை ஸ்ரீ சீலக்காரி அம்மன் உற்சவர் எடுப்பு சப்பரத்தில் ராஜாங்க சேவையாக திருவீதி உலா வந்தது

இரண்டாம் நாள் பரிவார பூஜைகளுடன் விஷ்ணு பூஜை நவக்கிரக ஹோமம் கோபூஜை, பல ஹோமங்கள் நடத்தி பூர்ணாஹுதியுடன் நையாண்டி மேளத்துடன் தீ வெட்டி பரிவாரங்களுடன் சிவாச்சாரியார் மந்திரங்கள் ஓத கருட தரிசனத்துடன் கடம் புறப்பாடாகி மகா கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, சுவாமிக்கு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. இந்த கும்பாபிஷேகத்தில், சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாதி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அறுசுவை அன்னதானம் நடந்தது

இதற்கான ஏற்பாடுகளை சாயும் படைதாங்கி வகையறாக்கள் தெத்தூர், நாராயணபுரம், கொழிஞ்சிபட்டி, அணைப்பட்டி கிராம சாயும் படைதாங்கி பங்காளிகள் செய்து இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top