Close
ஏப்ரல் 10, 2025 10:21 மணி

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் பொது விருந்து..

சென்னை

திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் திங்கட்கிழமை நடைபெற்ற விருந்தில் பங்கேற்று உணவருந்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவொற்றியூர்  அருள்மிகு  தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் திங்கட்கிழமை  பொது விருந்து நடைபெற்றது.

இதில் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று தொடக்கி வைத்தார்.

நிகழ்வில்,  வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி. சங்கர், பனைமர தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் எ நாராயணன், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, உதவி ஆணையர் எம் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top