Close
மே 20, 2024 9:38 மணி

எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் நிலையம்  திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விவசாயி களின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் துவக்கி வைக்கப்பட்டது. திறப்பு  விழாவில் எழுமாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரமூர்த்தி கலந்து கொண்டு நெல் கொள் முதல் நிலையத்தை துவக்கி வைத்தார்.

அப்போது கூறியதாவது 24 வேலம்பாளையம், ஆனந்தம் பாளையம், ஈஞ்சம்பள்ளி, குலவிளக்கு, பழமங்கலம் காகம் பூந்துறை சேமூர் பூந்துறை சேமூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதன் மூலம் பலன் பெறுகின்றனர் தற்போது கீழ்பவானி பாசன வாய்க்கால் மூலம் நெல் நடவு செய்யப்பட்ட வயல்களில் அறுவடை தொடங்கும் நிலையில் உள்ளது.

இதில் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்ய முன்கூட்டியே அரசின் ஆணைப்படி கொள்முதல் நிலையம் துவக்கி வைக்கப்படுகிறது இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top