Close
மே 10, 2024 8:36 மணி

அரசாணைக்கு பிறகு பணிகள் மேற்கொள்ள வேண்டும்: கீழ்பவானி பாசன விவசாயிகள் மனு

கீழ்பவானி வாய்க்கால்

விவசாயிகள் கோரிக்கை

அரசாணைக்கு பிறகு பணிகள் மேற்கொள்ள வேண்டும் கீழ்பவானி பாசன விவசாயிகள் மனு அளித்தனர்.

சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அரசாணை வெளியாகும் வரை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.
ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மற்றும் கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டமைப்பு தலைவர் காசியண்ணன் தலைமையில் விவசாய சங்க நிர்வாகிகள் கீழ்பவானி வடி நிலக்கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில்  அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக தெளிவான முடிவுகள் எடுக்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக விவசாயிகளிடையே குழப்பமான சூழல் உள்ளது. எனவே அரசின் சார்பில் தெளிவான அரசாணை வெளியாகும் வரை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு துணைத் தலைவர் ராமசாமி, ஆயக்கட்டு பாசன தாரர்கள் சங்க தலைவர் பெரியசாமி, செயலாளர் பொன்னையன், பொருளாளர் மங்கலப்பட்டி சண்முகராஜ், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சுப்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top