Close
மே 17, 2024 5:32 காலை

பவானிசாகர் அணையிலிருந்து 120 நாள்களுக்கு விவசாயப்பணிகளுக்கு தண்ணீர் திறப்பு

ஈரோடு

கீழ்பவானி ஆற்றில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீரை மலர்தூவி வரவேற்ற அமைச்சர் முத்துசாமி

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்துக்கு 120  நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்கள் போதிய அளவில் இருப்பில் உள்ளது  என அமைச்சர்  முத்துசாமி தெரிவித்தார்

பவானிசாகர் அணையில் இருந்து அடுத்த 120 நாட்களுக்கு 1.035 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பாசனத்துக்கு பயன்படும் வகையில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீரை கீழ்பவானி பிரதான கால்வாயில் இன்று காலை திறந்து விட்டனர்.

அணையில் போதுமான அளவிற்கு நீர் இருக்கிறது. எனவே நடப்பாண்டு தண்ணீர் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை ஏற்கனவே பவானிசாகர் அணை நிரம்பி வழிவதால் கால்வாயில் இரு தினங்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டது எனினும் அதிகாரப்பூர்வமாக இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது முதலில் 500 கனஅடி தண்ணீர் விடப்படும் பிறகு அது படிப்படியாக 2300 கன அடி வரை உயரும் கடந்தாண்டு பிரதான கால்வாயில் சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டது தற்பொழுது முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு
கீழ்பவானி ஆற்றில் சீறிப்பாயும் பாசன நீர்

எனவே உடைப்பு ஏற்பட வாய்ப்பில்லை விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் கையிருப்பில் உள்ளன புதிதாக பாரம்பரிய ரகமான தூயமல்லி என்ற நெல் விதையை மூன்று டன் விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம். பாசன கால்வாய்கள் தேர்தல் துவக்கப்பட்டது. படிப்படியாக அனைத்து அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்படும். அத்திக்கடவு – அவினாசி திட்டம் காலதாமதம் செய்யவில்லை.

அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை தண்ணீர் கொண்டு செல்லும் பைப்புகள் போடப்படுவது உள்ள சிக்கல்கள் காரணமாக தாமதம் ஏற்படுகிறது. தாளவாடி மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் கர்நாடக மாநிலத்துக்கு செல்கிறது.  இதை தாளவாடி பகுதியில் பயன்படுத்த ஆய்வு நடத்தப்படும். தெங்குமரஹடா பகுதியில் உள்ள குடும்பங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.அந்த ஆய்வும் பரிசீலனையில் உள்ளது.

கேரள மாநிலம், பாண்டியாறு-புன்னம்புழா நதி நீரை மோயாறு சேர்ப்பது குறித்த ஆய்வும் நடைபெற்று வருகிறது. கீழ்பவானி பாசன கால்வாயை நவீனப்படுத்த அரசு திட்டமிட்டது. விவசாயிகள் இரு பிரிவாகப் பிரிந்து இத்திட்டத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் காட்டுகின்றனர்.

இது சம்பந்தமாக நீதிமன்றங்களை அணுகி உள்ளனர் அரசைப் பொறுத்தவரை இரு பிரிவினரும் அமர்ந்து பேசி இப்பிரச்னையில் ஒரு சுமுகமான தீர்வு காணவேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. தாளவாடி மலைப்பகுதியில் வனவிலங்குகள் பாதிக்காமல் இருக்க இரவு நேர வாகன போக்குவரத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனினும் உள்ளூர் மக்கள் இரவில் தாளவாடி வழியாக செல்ல பாஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தாளவாடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படும் பவானிசாகர் அணை உபரி நீரை அருகில் உள்ள குளம் குட்டைகளில் நிரப்ப ஆய்வு மேற்கொள்ளப்படும். சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைதரம் உயர்த்தப்பட்டு அனைத்து வசதிகளும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

வீட்டு வசதி வாரியத்தில் உள்ள காலி பணியிடங்கள் அரசு தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும். தற்காலிக ஊழியர்கள் சம்பந்தமாக சிஎம்டிஏ நடவடிக்கை எடுக்கும் என்றார்  அமைச்சர் முத்துச்சாமி. பேட்டியின்போது ஈரோடு மாவட்ட  ஆட்சியர்  கிருஷ்ணன்உண்ணி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top