Close
மே 11, 2024 5:36 காலை

புதுக்கோட்டை ஆறாவது புத்தகத் திருவிழாவிற்கான ஆட்டோ பிரசார பதாதைகள் வெளியீடு

புதுக்கோட்டை

புதுகை புத்தக திருவிழா ஆட்டோ விளம்பர பதாகை வெளியிட்ட விழா ஒருங்கிணைப்பு குழுவினர்

புதுக்கோட்டை ஆறாவது புத்தகத் திருவிழாவிற்கான ஆட்டோ பிரசார பதாதைகள் வெளியிடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்ரூபவ் இணைந்து புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 6 வரை 10 நாட்கள் புத்தகத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

புதுக்கோட்டையின் விழாக்களில் அனைவரையும் கவர்ந்த ஒன்றாக கருதப்படும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா பணிகள் மக்கள், மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை
பெற்றுள்ளது.

இவ்விழாவின் வரவேற்புக்குழு தலைவராக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா  இருந்து செயல்படுகிறார்கள்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர், மாவட்டஆதிதிராவிடர் நல அலுவலர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உள்ளிட்டோர்களைக் கொண்ட வழிகாட்டி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

கவிஞர்கள், அறிவியல் இயக்கநிர்வாகிகளைக் கொண்ட ஒருங்கிணைப்பாளர்கள் அரசுத் துறைகளோடு இணைந்து விழாஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் புத்தகத் திருவிழா விளம்பரப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக    புதுக்கோட்டை  திருக்கோகர்ணம் வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் ஆட்டோ பிரசார பதாகைகளை வெளியிட்டு பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் துண்டறிக்கையை  வழங்கி பிரசாரம் செய்தனர்.

இதில் புத்தக திருவிழா ஒருங்கிணைப்பளார்கள் கவிஞர் தங்கம் மூர்த்தி, முனைவர் ஆர்.ராஜ்குமார், அ.மணவாளன், ம.வீரமுத்து, மு.முத்துக்குமார், பவனம்மாள், கவிஞர் ஜீவி மற்றும் வரவேற்புக் குழுவினர் கவிஞர் கவிகார்த்திக், யோகா
பாண்டியன்,கராத்தே கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை வாசிக்கிறது

மேலும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பள்ளி,வ் கல்லூரி,  நூலகங்கள், பொதுமக்கள் கூடும் ஆயிரக்கணக் கான இடங்களில் லட்சக்கணக்கில், தொடர்ந்து ஒரு மணிநேரம் புத்தகங்கள் வாசிக்கும் புதுக்கோட்;டை வாசிக்கிறது நிகழ்வை புதுக்கோட்டை அரசு இராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் (6.7.2023) வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கி வைக்கவுள்ளதாக புத்தக திருவிழா ஒருங்கிணைப்புக் குழுவினர் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top