Close
மே 20, 2024 3:02 மணி

நாகுடி துணை மின் நிலையப்பகுதிகளில் நாளை(11.7.2022) மின்தடை

அறந்தாங்கி

அறந்தாங்கி அருகே நாகுடி-ஆவுடையார்கோ கோவில் பகுதிகளில் நாளை மின்தடை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே 110/33-11 KV நாகுடி துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம்  பெறும்  பின்வரும் பகுதிகளில் நாளை(11.7.2022) திங்கள்கிழமை  காலை 9 மணியிலிருந்து  மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அறந்தாங்கி உதவிசெயற்பொறியாளர் /நகர் – கே.தனபால் வெளியிட்ட தகவல்:

11 KV கட்டுமாவடி மின்பாதையில் உள்ள நாகுடி, காரவயல் புறங்காடு, ஏகனி வயல், ஏகப்பெருமகளூர், அத்தானி, கட்டுமாவடி, கிருஷ்ணாஜிப்பட்டினம், மேலாஸ்தானம் ஆகிய பகுதிகளிலும்.

11 KV ஆவுடையார்கோவில் மின்பாதையில் உள்ள நாகுடி, அறியமறக்காடு,காரணியேந்தல் தொண்டைமாநேந்தல், குடிக்காடு, வேட்டனூர்; மானநல்லூர், கிடங்கிவயல் செல்வநேந்தல் கீழ்குடிவாட்டாத்தூர், பட்டமுடையான, ஆகிய பகுதிகளில் வருகின்ற 11.07.2022 (திங்கட்கிழமை) அன்று சிறப்பு பராமரிப்பு பணிக்காக காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top