Close
மே 20, 2024 1:38 மணி

கோவிட் – 19 இறப்பிற்கு கருணைத்தொகை: ஆட்சியர் கவிதாராமு தகவல்

புதுக்கோட்டை

கொரோனா கருணைத்தொகை: ஆட்சியர் தகவல்

கோவிட் – 19 இறப்பிற்கு கருணைத்தொகை வழங்குவது தொடர்பாக   உச்சநீதி மன்றத்தின் புதிய வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட  ஆட்சியர் கவிதாராமு  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட தகவல்: கோவிட் -19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in  இணைய தளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின்(Death Ascertaining Committee)  மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 74,097 மனுக்கள் பெறப்பட்டு 55,390 இனங்களுக்கு ரூ.50,000- வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 13,204 மனுக்கள் ‘இருமுறை பெறப்பட்ட மனு” என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில்,  உச்ச நீதிமன்றம்  20.03.2022-இல் வழங்கிய தீர்ப்பதில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.) 20.03.2022-இக்கு முன்னர் ஏற்பட்ட கோவிட்-19 இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வரும் 60 நாட்களுக்குள் (18.05.2022 தேதிக்குள்) மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
2.) 20.03.2022 முதல் ஏற்படும் கோவிட் -19 இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
3.) சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 தினங்களுக்குள் தீர்வு காண வேண்டும்.
4.) மேற்குறிப்பிட்டுள்ள காலக் கெடுவிற்குள் நிவாரணம் கோரிய மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் (District Revenue Officer) தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு வழங்கும் .
எனவே கோவிட்-19 தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் மேற்கண்ட உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top