Close
மே 20, 2024 9:21 மணி

கந்தர்வக்கோட்டை ஒன்றிய ஆண்டிக்குளப்பம்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் ஆண்டு விழா

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றிய ஆண்டிக்குளப்பம்பட்டி இல்லம் தேடிக்கல்வி மையத்தில் ஆண்டு விழா நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு  தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் அவர்களின் வழிகாட்டுதலின் படியும், புதுக்கோட்டை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சி.சுவாமி முத்தழகன், கந்தர்வகோட்டை வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆ.வெங்கடேஸ்வரி,  ந.நரசிம்மன்,  வட்டார வள மைய மேற்பார்வையாளர் கு.பிரகாஷ் ஆகியோர்களின் ஆலோசனையின் படியும், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கந்தர்வகோட்டை ஒன்றிய ஆண்டிக்குளப்பம்பட்டி இல்லம் தேடிக்கல்வி மையத்தில் ஆண்டு விழா நடைபெற்றது. தன்னார்வலர் மஞ்சுளா வரவேற்றார். நேதாஜி,வீரபாண்டிய கட்டப்பொம்மன், திருப்பூர் குமரன், அவ்வையார், அம்பேத்கர், பாரதியார், ராதாகிருஷ்ணன், ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், திருவள்ளுவர் வியாபாரிகள் ஆகிய வேடங்களில் மாணவர்கள் மாறுவேடம் அணிந்து அவர்களின் வரலாறு குறித்து மாணவ மாணவிகள் பேசினார்கள்.

சிறப்பு அழைப்பார்களாக கலந்து கொண்ட இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் அ.ரகமதுல்லா பேசியதாவது:  எண்ணும், எழுத்தும் திட்டத்தில் தொடக்க நிலை மாணவர்களுக்கு   கற்றல் திறனை மதிப்பீடு செய்வது, மாணவர்களின் வருகை பதிவை இல்லம் தேடிக் கல்வி மைய செயலில் பதிவேற்றம் வேண்டும்.

பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பள்ளிமேலாண்மைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். தங்களுடைய படைப்புகளை இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களுக்கான வெளிவரும் தொடுவானம் இதழில் அனுப்ப வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

மாணவர்களின் அன்றாட நிகழ்வுகளை இல்லம் தேடி கல்வி செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்கள் வாசித்தல், கதை, விளையாட்டு, பாடல்கள் மற்றும் எளிய அறிவியல் செயல்பாடுகள் மூலம் கற்று வருவது பெற்றோர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

கொரனோ கால கற்றல் இழப்புகளை சரி செய்து தற்போது அடிப்படை திறன்களையும், வாசிப்பு திறன்களையும் மனமகிழ்ச்சியுடன் கற்பதற்கு இல்லம் தேடிக் கல்வித் திட்டம் ஓராண்டாக மிகுந்த பயனளிப்பதாகவும் , மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். இந்நிழ்விற்கான ஏற்பாடுகளை தன்னார்வலர்கள் பிரேமா, செல்வமணி, கோமதி ஆகியோர் செய்திருந்தனர். நிறைவாக மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top