Close
மே 20, 2024 6:57 மணி

சண்முகநாதன் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான பயிற்சிப் பட்டறை

புதுக்கோட்டை

திருமயம் அரசம்பட்டி சண்முநாதன் பொறியியல் கல்லூரில் நடைபெற்ற தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் பயிற்சிப் பட்டறையில் பேசிய  புதுக்கோட்டை கம்பன்கழக கூடுதல் செயலாளர்  ச.பாரதி.

திருமயம் அருகே அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான வழிகாட்டும் பயிற்சிப் பட்டறை  அண்மையில் (பிப்.14)நடைபெற்றது.

இந்திய அரசின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை\ அமைச்சகத்தின் சார்பில், அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரி மற்றும் திருமயம், பாரத்மாதா இளையோர் மன்றம் இணைந்து நடத்திய தொழில் முனைவோருக்கான வழிகாட்டும் பயிற்சிப் பட்டறை கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

சண்முகநாதன் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் குழ.முத்துராமு முன்னிலை வகித்தார். புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் ஜோயல்பிரபாகரன் தலைமை உரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினர்களாக சென்னை பத்திரிகையாளர் ராம. நம்பிநாராயணன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழக கூடுதல் செயலாளர் ச.பாரதி, கற்பக விநாயகா மேலாண்மைக் கல்லூரி இயக்குநர் அனிதாராணி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மேலும் இவ்விழாவில் ஜெ.ஜெ.கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் தயாநிதி, புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சதாசிவம் , நேரு யுவகேந்திரா திட்ட உதவி அலுவலர்  நமச்சிவாயம் மற்றும் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசியர்கள், மாணவ, மாணவியர், புதுக்கோட்டை நேருயுவகேந்திரா பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக புதுக்கோட்டை  நேரு யுவகேந்திரா தேர்வுக்குழு உறுப்பினர் சரவணன் வரவேற்றார். நிறைவாக புதுக்கோட்டைநேரு யுவகேந்திரா தன்னார்வலர் கருப்பையா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top