Close
மே 20, 2024 7:07 மணி

ஆசிரியர் தினம்.. ஆரத்தி எடுத்துஆசிரியர்களுக்குவாழ்த்துகள் கூறிய ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மாணவிகள்

புதுக்கோட்டை

ஆரத்தி எடுத்து ஆசிரியர் தின வாழ்த்துகள் தெரிவித்தன வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவிகள்

ஆசிரியர்களுக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்துகள் கூறிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள்.

புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் ஆசிரியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற நிகழ்ச்சி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

காலந்தோறும் அறிவு என்னும் ஒளியை அள்ளி அள்ளி வழங்குகின்ற ஆசிரியப் பெருமக்களுக்கு நன்றிகூறும் வகையில் ஆசிரியர் தினத்தில் பள்ளிக்கு வந்த முதல்வர் கவிஞர்தங்கம்மூர்த்திக்கு மழலை மாணவர்கள் ஆரத்தி எடுத்தும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

புதுக்கோட்டை
ஆசிரியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய மாணவிகள்

மேல்நிலைவகுப்பு மாணவர்கள் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். பள்ளியின் முதல்வர் கவிஞர்தங்கம்மூர்த்தி அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் சிறப்புபரிசுகள் வழங்கினார்.

ஆசிரியர்களுக்கு இன்னும்கூடுதல் பொறுப்பு இருப்பதாகவும் மாணவர்களை தாங்கள் பெற்றபிள்ளைகளுக்கு மேலாக நினைத்துஅவர்களைஅன்பு, அறிவு, பண்பு நிறைந்தவர் களாக வளர்க்க வேண்டியது ஆசிரியர்களின் பொறுப்பு என தெரிவித்து ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top