Close
மே 17, 2024 6:25 காலை

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா

புதுக்கோட்டை

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் புதுக்கோட்டை ஒன்றியத்தின் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு. தியாகராஜன்  வழிகாட்டலில், புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா வட்டாரத் தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜாங்கம், மாவட்டச் செயலாளர் நாயகம், பொருளாளர்செந்தில் குமார்,மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் நாகலட்சுமி, அமைப்புச் செயலாளர் முத்துக்குமார், செய்தி தொடர்பாளர் ரஹமதுல்லா, சந்தைப் பேட்டை உதவித் தலைமை ஆசிரியர் விஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், மாநில சட்ட ஆலோசகர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட ஆலோசனை குழு தலைவர் பழனிச்சாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

பணி ஓய்வு பெற்று பாராட்டு பெறக்கூடிய தலைமை ஆசிரியர் விஜயமாணிக்கம், பட்டதாரி ஆசிரியர்கள் பன்னீர்செல்வம் ,கணேசன், திருநாவுக்கரசு, மதுசூதனன் ஆகியோருக்கு,

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள், முனைவர் கலையரசன், செந்தில் குமார், ஜெகதீஸ்வரன், மாரிமுத்து சரவணப் பெருமாள், கோவிந்தராஜன்,கதிஜாபேகம், ஒன்றிய நிர்வாகிகள் சுப்பிரமணி, முத்துக்குமார் பாபு சிவராம், பழனிமுத்து, சரவணன், ஷ்யாம் சுந்தர், யோகராஜ்,செல்லக்கண்ணு உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

ஓய்வு பெற்ற ஆசிரியர் பெருமக்கள் தங்களுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை கல்வித் துறையில் அர்ப்பணித்து மாணவர்களின் முன்னேற்றம், சமூக முன்னேற்றம் உள்ளிட்ட பணிகளில் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஒவ்வொருவரும் சமுதாய நலனின் அக்கறை கொண்டவர்கள் இவருடைய வாழ்க்கை மென்மேலும் சிறப்பாக அமைய வேண்டும் என வாழ்த்தினர்.
முன்னதாக, வட்டாரச் செயலாளர் முருகராஜ் அனைவரையும் வரவேற்றார். கல்வி மாவட்ட பொருளாளர் ஜோதிபாசு நன்றி கூறினார். நிறைவாக  ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஏற்புரை ஆற்றினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top