Close
மே 20, 2024 9:38 மணி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32வது நினைவு நாள்: காங்கிரஸ் சார்பில் அஞ்சலி

புதுக்கோட்டை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுநாளில் அவரது உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்திய காங்கிரஸார்

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32வது நினைவு நாள் (மே.21) அனுசரிக்கப்பட்டது..

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32 வது நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்டி.ராமச்சந்திரன் தலைமையில், திருமயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம் முன்னிலையில் நடைபெற்ற இந்தியாவின் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 32 ஆவது ஆண்டு நினைவு நாளில் ராஜீவ்காந்தியின் திருவுருவப்படத்திற்கு முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்டி. ராமச்சந்திரன். திருமயம் முன்னாள் எம்எல்ஏ ராம.சுப்புராம் இணைந்து  காங்கிரஸ் நிர்வாகிகள் 25 பேருக்கு வேஷ்டிகளை வழங்கினர்.

இதேபோன்று திருமயம், ஆலங்குடி, பொன்னமராவதி, திருவரங்குளம், கீரமங்கலம், அரிமளம் உள்ளிட்ட பல ஒன்றியங்களில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

இதில் மாநில, வட்டார, நகர காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு ராஜீவ்காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி  செலுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top