Close
மே 20, 2024 2:12 மணி

கம்பனின் படைப்புகள் தமிழில் தனித்தன்மையுடன் இருந்து வருகிறது

புதுக்கோட்டை

புதுக்கோட்டை கம்பன் விழாவில் பங்கேற்று நூல் வெளியிட்ட நீதியரசர்கள் மகாதேவன், சுரேஷ்குமார் உள்ளிட்டோர்

புதுக்கோட்டையில் 48-வது ஆண்டு கம்பன்  பெருவிழா புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது. 10 நாள்கள் நடைபெறும்  கம்பன் பெருவிழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சி  சனிக்கிழமை நடைபெற்றது.

கம்பன்கழக தலைவர் ராமச்சந்திரன், சிறப்பு விருந்தினர் களை கௌரவித்து நினைவு பரிசுகளை வழங்கினார்.

புதுக்கோட்டை கம்பன் கழக பெருவிழாவின் 2-ம் நாள் நிகழவில், திண்டுக்கல் அம்சவேணி தயாரித்து, புதுச்சேரி ரவி குணவதி மைந்தன் எழுத்து இயக்கத்தில் தயாரான கவிச்சக்கரவர்த்தி கம்பர் திரைப்படம்  வெளியிடப்பட்டது.

அதை தொடர்ந்து பல்பணி அரங்கம் நடைபெற்றது. இதில்  புதுகை தென்றல் ஆசிரியர் தர்மராஜனுக்கு இலக்கிய மாமணி விருதும்   ஸ்ரீ புவனேஸ்வரி தங்கமாளிகை உரிமையாளர் சோம.நடராஜன் மற்றும் முத்து மீனாட்சி மருத்துவமனை டாக்டர்.பெரியசாமி கண் தான ஒருங்கிணைப்பாளர்   கோவிந்தராஜன் ஆகியோருக்கு கம்பன் பணிவள்ளல் விருது விருதுகளை  வழங்கினார்.

நிலாவைப்பழனியப்பன், அறிவுச்சுடர் ஆகியோர்   எழுதிய நூல்கள் வெளியிடப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் தலைமை வகித்து பேசுகையில், கம்பனின் படைப்புகள் உலகில் தத்துவங்களை மிஞ்சும் வகையில் இருந்து வருகிறது. உலகில் உன்னதமான படைப்பாக கம்பராமாயணம் இருந்து வருகிறது.

இயல், இசை, நாடகம், மானிடம் வாழ்க்கை முறை என பலவற்றை உணர்த்தியுள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழி காப்பியங்கள் வாழ்வியலை உலகிற்கு காட்டியது. கம்பனின் படைப்புகள் தமிழில் தனித்தன்மை யுடன் இருந்து வருகிறது. வாழ்வில் நல்லதை செய்ய வேண்டும் என்பதை கம்பனின் காவியங்கள் உணர்த்துகின்றன என்றார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலை வகித்து பேசுகையில், கம்பனின் எழுத்துகள் புதிய பரிமாணத்தை தந்து கொண்டிருக்கிறது. கம்பனின் ஆரண்ய காண்டத்தை படித்த போது புதிய வினாக்கள் தோன்றுகிறது. காவியங்கள் அனைத்தும் இன்று வரை படித்து கொண்டே இருக்கலாம் என்றார்.

அதை தொடர்ந்து உள்ளத்தனையது உயர்வு என்ற தலைப்பில்  கம்பவாரிதி  இலங்கை ஜெயராஜ் பேசினார்.

ஏற்பாடுகளை கம்பன் கழகத் தலைவர் ச. ராமச்சந்திரன்,  செயலர் ரா. சம்பத்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதில், திருச்சி முன்னாள் மேயர்   சாருபாலா தொண்டைமான், மாவட்ட அறிவியல் இயக்கத் தலைவர் வீரமுத்து மற்றும் நிர்வாகிகள், தமிழ்ச் சான்றோர்கள் பலர்  கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top