Close
மே 10, 2024 1:12 மணி

கவிதைப்பக்கம்… அன்புடமை… டாக்டர் பெரியசாமி

தமிழ்நாடு

கவிதைப்பக்கம்- அன்புடமை

அன்புடமை

உழவே தலை என்று
ஏர் சொன்னது
உணவே தலை என்று
ஊர் சொன்னது..

மழையே தலை என்று
நீர் சொன்னது
மரமே தலை என்று
வேர் சொன்னது..

அறிவே தலை என்று
ஞானம் சொன்னது
அறமே தலை என்று
வானம் சொன்னது…

அரசனே தலை என்று
ஆட்சி சொன்னது
ஆதவனே தலை என்று
அகிலம் சொன்னது…

செந்தமிழே தலை என்று
பாரதியார் சொன்னது
செவிச் செல்வமே தலை என்று
பார் போற்றும் குறள் சொன்னது..

அன்பே தலை என்று
அண்ணல் காந்தி சொன்னது
அதுவே யுகத்தை வெல்லும் நிலை-என்று
அன்னை தெரசா சொன்னது
அதில் உண்மை உள்ளது!!

##மருத்துவர் மு.பெரியசாமி ##
புதுக்கோட்டை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top