Close
மே 15, 2024 10:54 காலை

புதுக்கோட்டை டவுன்ஹாலில் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை புத்தகத் திருவிழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவுக்கான பதாகையை வெளியிட்ட ஆட்சியர் கவிதாராமு. உடன் நிர்வாகிகள்

ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை புதுக்கோட்டை டவுன்ஹாலில்  புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.

 5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வரும் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கவிதாராமு முறைப்படி அறிவித்தார்.

5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் வருகின்ற ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெற உள்ளது. விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக விழா ஒருங்கிணைப்பாளர்கள் நா.முத்துநிலவன், அ.மணவாளன், ஆர்.ராஜ்குமார், எம்.வீரமுத்து, எல்.பிரபாகரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை சந்தித்து பேசினர்.

அப்போது, புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து வழக்கம் போல புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும், 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களை பங்கேற்கச் செய்வது மற்றும் புத்தக விற்பனையை அதிகரிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top