Close
மே 13, 2024 11:38 மணி

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உலக மதியிறுக்கம்(ஆட்டிஸம்) விழிப்புணர்வு தினம்

சென்னை

உலக மதியிறுக்கம் (ஆட்டிஸம்) விழிப்புணர்வு தினத்தையொட்டி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கிய மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மகேஷ்குமார். உடன் உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா மலர், துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜெ.கணேஷ் உள்ளிட்டோர் உள்ளனர்.  

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில்  உலக மதியிறுக்கம்(ஆட்டிஸம்) விழிப்புணர்வு தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. .

உலக மதியிறுக்கம் (ஆட்டிஸம்) விழிப்புணர்வு தினம் ஆண்டுதோறும் ஏப்.2-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து சிறப்பு நிகழ்ச்சி அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. குழந்தைகள் நல மருத்துவமனை துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜெ.கணேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்டான்லி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மகேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஆட்டிஸம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

ஆட்டிஸம் நோய் குறித்து துறை தலைவர் டாக்டர் ஜெ.கணேஷ் கூறியது,

அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்தில் மதியிறுக்க (ஆட்டிஸம்) பிரச்சனைகள் உள்ள சுமார் 120 குழந்தைகள் பதிவு செய்யப்பட்டு பல்வேறு சிகிச்சைகள் பெற்று வருகிறார்கள். இக்குழந்தை களுக்கு தகவல் பரிமாற்ற திறன்களுக்கான பேச்சுப் பயிற்சி மற்றும் தொழில்சார் சிகிச்சைகள் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக வழங்கப்படுகின்றது.

தொடர் சிகிச்சைக்கு வரும் குழந்தைகள், நல்ல முன்னேற்றம் அடைகின்றனர்.ஆகஸ்ட் 2023 முதல் குழந்தைகள் சமூக நல நிலையத்தில் உணர்ச்சி ஒருங்கிணைப்பு சிகிச்கை பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 40 முதல் 60 குழந்தைகள் பயன் பெறுகின்றனர்.

ஏப்ரல் 2 ம் தேதி உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பல பெற்றோர்கள் இந்த மையத்தில் வழங்கப்படும் பல்வேறு சிகிச்சைகள் குறித்தும் சிகிச்சையின் மூலம் தங்கள் குழந்தைகள் பெற்ற முன்னேற்றத்தையும் மேலும் மற்ற குழந்தைகள் போல இயல்பான நிலைக்கு வர இந்த சிகிச்சைகள் எவ்வாறு உதவியது என்பதையும் பகிர்ந்து கொண்டனர், குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இரண்டு வயதிற்குள் மதியிறுக்கம் கொண்ட குழந்தைகளை அடையாளம் கண்டு தொடர்ந்து சிகிச்சை அளித்தால் அவர்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடியும் என்பதையும் மற்றும் அவ்வாறு தொடர்ந்து சிகிச்சைக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்களின் முயற்சியையும் மருத்துவர்கள் பாராட்டினார்கள். மதியிறுக்கம் உள்ள குழந்தைகள் இந்த மையத்தை அணுகி பயிற்சி பெற்று பயன்பெறலாம் என்றார் கணேஷ்.

நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவ அதிகாரி டாக்டர் வனிதாமலர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top