Close
மே 9, 2024 8:37 மணி

விஜயவாடா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டு பேரணியில் தஞ்சையிலிருந்து 500 பேர் பங்கேற்க முடிவு

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற மாவட்டக்குழுக்கூட்டத்தில் பேசுகிறார், அக்கட்சியின் மாநிலச்செயலர் இரா. முத்தரசன்

விஜயவாடாவில் அக்டோபர் -14  -ல் நடைபெறும் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டு பேரணியில் 500 பேர் பங்கேற்பு தஞ்சையில் நடைபெற்ற தெற்கு மாவட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டத்தின் மாவட்ட குழு கூட்டம்  தஞ்சாவூர் கீழ ராஜ வீதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட குழு உறுப்பினர் தி.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில்தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளராக கோ. சக்திவேல், மாவட்ட பொருளா ளராக ந.பாலசுப்பிரமணியம், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களாக சி.சந்திரகுமார் உள்ளிட்ட 16 பேர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் பங்கேற்று, அகில இந்திய மாநாட்டின் நோக்கம் குறித்து பேசியதாவது: வருகின்ற அக்டோபர் 14-ஆம் தேதி முதல் 18 -ஆம் தேதி வரை விஜயவாடாவில் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டின் முதல் நாளான அக்டோபர் 14 -ஆம் தேதி லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பேரணி, மாநாடு நடைபெறுகிறது .இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு அக்டோபர் மாதம் விஜயவாடா நகரில் நடைபெற உள்ளது. தற்போதைய சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகள் மிகுந்த அரசியல் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.

பா.ஜ.க அரசு மக்கள் விரோத கொள்கைகளை அரசியக் தளத்திலும், சமுக தளத்திலும் பின்பற்றுகிறது. பா.ஜ.க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்தியாவில் வறுமை வளர்வதாக உலக கருத்து கணிப்புகள் சொல்கின்றன.

பசியுடன் மக்கள் இருப்பதாகவும், வேலைவாய்ப்பின்மை இருப்பதாகவும், இந்தியாவில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படு வதாகவம் ஒப்புகொள்கிறார்கள்.  மேலும் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார்மையம் ஆக்கப்படுகின்றன. அம்பானி, அதானி போன்ற முதலாளிகளுக்கு சாதகமாக மோடி அரசாங்கம் செயல்படுகிறது.

தனியார் துறையில் இடஒதுக்கீடு கொண்டு வர மோடி அரசாங்கம் தயாராக இல்லை என்றும், மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற்ற பிறகு அதற்காக கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் பா.ஜ.க அரசு நிறைவேற்றவில்லை.  எல்.ஐ.சி, விமான நிலையம், வங்கி ஆகிய அனைத்துமே தனியார் மையம் ஆகி வருகின்றன.

சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளாத, சுதந்திரத்திற்கு துளியும் பங்கு இல்லாத பா.ஜ.க சுதந்திரமே தங்களால் தான் கிடைத்தது போல செய்து  நடந்து கொள்கிறார்கள்.  2024 -ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க ஆட்சி முறியடிக் கப்பட வேண்டும். தேர்தலுக்கு முன்னர் அனைத்து ஜனநாயக் சக்திகளும் ஒன்று சேர வேண்டும் என்றார் இரா முத்தரசன்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்: விஜயவாடாவில் நடைபெறும்  பேரணி மாநாட்டில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 500 பேர் கலந்து கொள்வது ,தஞ்சாவூர், கும்பகோணம் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய நான்கு கல்வி மாவட்டங்களில் ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தை பட்டுக்கோட்டையுடனும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தை தஞ்சாவூருடனும் இணைக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு,  பள்ளி கல்வி துறை அமைச்சரும் நான்கு கல்வி மாவட்டங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும், இணைக்கும் முடிவு கிடையாது என்று அறிவித்த பின்னரும், தற்போது ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்கள் தஞ்சாவூர் கல்வி மாவட்டத்துடன் இணைக்கும் முடிவை  கைவிடஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தற்போது நெல் அறுவடை செய்து கொள்முதல் நிலையங் ளில் ஈரப்பதம் காரணமாக கொள்முதல் செய்யப்படாமல் பல நாட்களாக திறந்தவெளியில் வீணாகி வருகிறது. 17 சதவீத ஈரப்பதம் குறித்த கொள்முதலில் 20% வரை ஈரப்பதம் வைத்து கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உதவிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top