நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இது குறித்து கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நாளை 12ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு, மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெறுகிறது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகிக்கிறார்.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்எல்ஏக்கள் பொன்னுசாமி, ராமலிஙகம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திமுகவின் முப்பெரும் விழா குறித்தும், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாவட்ட செயலாளர்களுக்கு தெரிவித்த அறிவுரைகள் குறித்தும், செப். 15 அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
கூட்டத்தில், தொகுதி பார்வையாளர்கள், முன்னாள் எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, டவுன் பஞ்சாயத்து நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என ராஜேஷ்குமார் எம்.பி., வேண்டுகோள் விடுத்துள்ளார்.




