Close
ஏப்ரல் 24, 2026 1:15 காலை

நாமக்கல்லில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., பிறந்த நாள் விழா

நாமக்கல்லில் நடைபெற்ற, திமுக துணைப் பொதுச்செயாலளர் கனிமொழி, எம்.பி., பிறந்தநாள் விழாவில், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ராணி, முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல்லில் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி, எம்.பி., பிறந்த நாள் விழா நாமக்கல் சாந்தி முதியோர் இல்லத்தில் நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்ட முன்னாள் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் மோகன் தலைமை வகித்தார்.

மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ராணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்களுக்கு, குளிர்காலத்திற்கு தேவையான போர்வைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சேக் நவீத், மாநகராட்சி கவுன்சிலர் சரவணன், முன்னாள் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சத்தியபாபு, கிழக்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமைப்பிரிவு துணை அமைப்பாளர் கிரிஸ்டோபர் மார்ட்டீன், முன்னாள் கவுன்சிலர் சம்பத், முன்னாள் நகர மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் அங்காள பரமேஸ்வரி, சுரேஷ், பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top