Close
ஏப்ரல் 23, 2026 11:33 மணி

தமிழக விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின்சார இணைப்பு வழங்க கோரிக்கை

வேலுசாமி, மாநில தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம்.

தமிழக விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின்சார இணைப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு 2025–2026 ஆம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு, விவசாய பயன்பாட்டிற்காக 50 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று தமிழக சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டது.

அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 4 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை இலவச மின்சார இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தமிழக விவசாயிகள் பதிவு செய்துவிட்டு, மின் இணைப்புக்காக காத்துக்கொண்டு உள்ளனர்,

தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக இலவச மின் இணைப்பை விவசாயிகள் பயன்பாட்டிற்கு விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top