Close
மே 15, 2024 9:10 காலை

சர்வதேச ஊழல் எதிர்ப்பு- மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நமது மக்கள் கட்சி பொதுச்செயலருக்கு கௌரவ டாக்டர் பட்டம்

சென்னை

நமது மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் புதுக்கோட்டை சரவணதேவா அவர்களுக்கு சமூக சேவகர் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது

சென்னையில் சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில் கௌரவ டாக்டர் பட்டமளிப்பு விழா தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் அன்பகத்தில் நடைபெற்றது.

விழாவில், தமிழக சட்டத்துறை அமைச்சர்  எஸ். ரகுபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகையில்,

சென்னை
விழாவில் பேசிய சட்ட அமைச்சர் ரகுபதி

இங்கு வருகை தந்திருக்கிற இளைஞர்கள் அனைவரும்  மனித உரிமை மற்றும் லஞ்ச ஒழிப்பு பற்றியும் மக்கள் நலனில் அதிக கவனம்  செலுத்தி, மக்களின் எதிர்காலத்துக்கு  வழிகாட்டியாக  இருந்து அரும்பாடுபட வேண்டுமென குறிப்பிட்டார். பின்னர் கௌரவ பட்டம் பெரும் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்தார். 

சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் சமூக சேவைக்கானகௌரவடாக்டர்பட்டமளி  விழா, தலைவர் ஹரிஷ் தலைமையில் நடைபெற்றது.

சர்வதேச ஊழல் மற்றும் மனித உரிமை ஆணையம் தமிழ்நாடு தலைவர் டாக்டர் கோ ப. அருள்நிதி பங்கேற்று,   நமது மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் பிற்படுத்தப் பட்டார் உரிமைக்கான கூட்டமைப்பு மத்திய மண்டல செயலாளர் புதுக்கோட்டை சரவணதேவா –வுக்கு சமூக சேவகருக்கான கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.

விழாவில் சர்வதேச ஊழல் மற்றும் மனித உரிமை ஆணையம் புதுச்சேரி மாநில தலைவர் டாக்டர் ஜெகதீசன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இதில் நமது மக்கள் கட்சி புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் இராம. சுரேஷ்வர்மன்,  தலைமை அலுவலக செயலாளர்- மாவட்ட இளைஞர் அணி செயலாளர் செல்ல. விக்னேஷ் மஞ்சாடியார் உள்பட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top