Close
மே 18, 2024 1:17 மணி

மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா பாசன பகுதிகளை பார்வையிட அமைச்சர்கள் குழு: முதலமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா பாசன பகுதிகளை பார்வையிட அமைச்சர்கள் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களில் தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெய்த கன மழையின் காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நீரில் சாய்ந்து மூழ்கியுள்ளன என்ற தகவல் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

இந்த பருவம் தவறி பெய்த திடீர் மழை தற்போது குறைந்து வருகிறது. மேலும் நீரினை வடிய வைக்க உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது சம்பந்தமாக ஏற்கெனவே, வருவாய்த் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கள ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்கள் முதல்நிலை ஆய்வினை மேற்கொண்டுள்ளார்கள்.

மேலும், இதனை நேரடியாக ஆய்வு செய்வதற்காக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,  உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி ஆகியோரை அனுப்பிவைத்துள்ளேன். இவர்களுடன் வேளாண் துறைச் செயலாளர் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட மூத்த துறை அதிகாரிகளையும் இந்தக் கள ஆய்வினை மேற்கொண்டு விவசாயிகளைச் சந்தித்துப் பேசி விவரங்களைப் பெற அறிவுறுத்தியுள்ளேன்.

வரும் திங்கட்கிழமை (6-2-2023) அன்று இந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவை சந்தித்து, சேத விவரங்களை அறிந்து, மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்க ளுக்கு பயிர்காப்பீடுத்தொகை பெற்றுத் தருவது குறித்தும், இழப்பீடு வழங்குவது குறித்தும் உரியமேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top