Close
மே 4, 2024 1:23 மணி

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் மகளிர் தின கொண்டாட்டம்

கோபி

கோபி நகராட்சியில் நடைபெற்ற உலக மகளிர் தின விழா

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

நகர் மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ் தலைமையில் நகராட்சி மேலாளர் ஜோதிமணி மற்றும் துப்புரவு அலுவலர் சோழராஜ் முன்னிலையில் மகளிர் தினம் கொண்டாடப் பட்டது.  நிகழ்வில் பெண் பணியாளர்கள் கேக் வெட்டி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், அலுவலகப் பணியாளர்கள் ஒவ்வொருவரும் மகளிர் தினத்தின் சிறப்புகளையும் மகளிர் தனிச்சிறப்புகளையும் பேசி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

நிகழ்ச்சியில்  நகர்மன்ற தலைவர் பேசுகையில், அனைத்து துறைகளிலும் மகளிரின் பணி பாராட்டத்தக்க வகையில் சிறந்து விளங்குகிறது. தற்போதுள்ள நகர் மன்ற உறுப்பினர்களில் 50 சதவீதம் மகளிர் நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

இவர்கள் சிறந்த பணியாற்றி வருவதாகவும், அலுவலகத்திலும் ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ளனர். அவர்களும் ஆண்களுக்கு இணையாக சிறப்பாக பணிபுரிந்து வருவதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து பெண் பணியாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இதில், துப்புரவு ஆய்வாளர் கார்த்திக், கணக்காளர் பழனியப்பன், உதவி பொறியாளர் பிரேமா, பணி மேற்பார்வையாளர் பிரபாகரன், உதவி திட்ட அமைப்பாளர் செந்தில் நாதன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் வரவேற்றார்.  இறுதியில் இளநிலை உதவியாளர் ரிஸ்வான் நன்றி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top