Close
மே 20, 2024 6:27 மணி

தமிழ்நாட்டில் விருதுநகர் உள்பட 7 மாநிலங்களில் மெகா ஜவுளிப் பூங்கா: மத்திய அரசு அனுமதி

தமிழ்நாடு

தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் ஜவுளி பூங்கா அமைகிறது

தமிழ்நாட்டில் விருதுநகர் உட்பட 7  மாநிலங்களில் மெகா ஜவுளிப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் விருதுநகர், தெலங்கானாவில் வாரங்கல், குஜராத்தில் நவ்சாரி, கர்நாடகத்தில் கலாபுரக்கி, மத்தியப்பிரதேசத்தில் தார், உத்தரப்பிரதேசத்தில் லக்னோ, மகாராஷ்டிராவில் அமராவதி ஆகிய 7 இடங்களில் ரூ.4,445 கோடி மதிப்பீட்டில் இந்த ஜவுளிப் பூங்காக்கள் அமைய உள்ளன. பிஎம் மித்ரா திட்டத்தின் கீழ் இந்தப் பூங்காக்கள் அமைய உள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு, தரமான பட்டு நூல் உற்பத்தி செய்வதற்கான 14 தானியங்கி இயந்திரங்களை அமைக்க மத்திய அரசு ரூ.6,585.68 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.

கன்னியாகுமரி தொகுதி மக்களவை  காங்கிரஸ் உறுப்பினர்  விஜயகுமார் என்கிற விஜய் வசந்த் கேட்ட கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜவுளித் துறை இணையமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top